சத்தியமங்கலம் செய்திகள்
மகேஷ்பாண்டியன்.பா செய்தியாளர் 8667702886
Monday, March 11, 2024
சத்தியமங்கலம் செய்திகள்
Wednesday, November 15, 2023
சத்தியமங்கலம் செய்திகள்
தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில் சாணியடி வினோத திருவிழா நடைபெற்றது.
Sunday, November 12, 2023
சத்தியமங்கலம் செய்திகள்
சத்தியமங்கலம் அருகே மரத்தில் கார் மோதி விபத்து 4 இளைஞர்கள் உயிரிழப்பு
![]() |
Thursday, November 9, 2023
சத்தியமங்கலம் செய்திகள்
உதயநிதி ஸ்டாலின் சனதானம் குறித்து பேசியது கருத்து சுதந்திரம் என்றால் புஞ்சை புளியம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி அன்று இந்து முன்னணி நிர்வாகிகள் பேசிய கருத்துக்கு மட்டும் காவல் துறை கைது செய்தது ஏன்..
Wednesday, November 8, 2023
சத்தியமங்கலம் செய்திகள்
கல்கடம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம். ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குத்தியாலத்தூர் ஊராட்சி, கல்கடம்பூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில். பழுதடைந்த இடங்களையும், சத்துணவு சமையல் கூடத்தில், உணவுகளின் தரத்தையும், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி தெற்கு ஒன்றிய திமுக கழக ஒன்றிய செயலாளர் கே. சி. பி. இளங்கோ ஆய்வு செய்தார்
இந்த ஆய்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் சு. பிரேம்குமார். (கி. ஊ) வட்டார வளர்ச்சி அலுவலர், அ. அப்துல் வஹாப் உதவிப்பொறியாளர், முருகன். ஒன்றிய பணி மேற்பார்வையாளர். வெள்ளியங்கிரி, கோணமூலை ஊராட்சி மன்ற தலைவர். குமரேசன் (என்கிற) பா.செந்தில்நாதன், ஒன்றிய துணை செயலாளர், திரு.T.P.அசோகன்.
மற்றும் குத்தியாலத்தூர். ஊராட்சி மன்ற செயலாளர். திரு.ரஜேஷ்.பள்ளித் தலைமை ஆசிரியர். மற்றும்கழக உறுப்பினர்கள். திரு.கோவிந்தராஜ். திரு.அண்ணாதுரை, திரு.ராமசாமி. ஆகியோர் உடனிருந்தனர்.
Tuesday, November 7, 2023
சத்தியமங்கலம் செய்திகள்
சத்தியமங்கலம் செய்திகள்
சத்தியமங்கலம் அடுத்த கோணமூலை ஊராட்சியில் அரசு திட்ட பணிகளை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர் ..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம். ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோணமூலை ஊராட்சி, காந்திநகர், மாரியம்மன் கோவில் மெயின் வீதியில். சிமெண்ட் கான்கிரீட் சாலை, அமைக்கும் இடங்களையும், பழுதடைந்த கழிவுநீர் வடிகால்களையும், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி தெற்கு ஒன்றிய திமுக கழக ஒன்றிய செயலாளர் கே. சி. பி. இளங்கோ அவர்கள், பார்வையிட்டார். மேலும் இவர்களுடன் கோணமூலை ஊராட்சி மன்ற தலைவர், திரு.குமரேசன் (என்கிற) பா.செந்தில்நாதன். ஒன்றிய துணை செயலாளர் திரு.T.P.அசோகன். பொறியாளர். திரு.ஜெயகாந்தன். அவர்கள். மற்றும் கழக உறுப்பினர்கள். திரு.கோவிந்தராஜ். திரு.விஜயமூர்த்தி. ஆகியோர் உடனிருந்தனர்.
Sunday, November 5, 2023
சத்தியமங்கலம் செய்திகள்
திம்பம் மலைப்பாதையில் நீதிமன்றம் உத்தரவு படி 16.2 டன் எடைக்கு மேல் ஏற்றி வரும் வாகனங்களுக்கு தடையை மீறினால் குறைந்த பட்சம் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும அதற்கு மேல் ஒரு டன் எடைக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது.தமிழ்நாடு கர்நாடக ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் முக்கிய மலைப்பாதை உள்ளது.த மலைப்பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றம் உத்தரவு படி திம்பம் மலைப்பாதையில் 6,10,சக்கர லாரிகள் மற்றும் மொத்த எடை 16.2 டன் எடையுள்ள சரக்கு லாரிகளை அனுமதிக்க வேண்டும் எனவும் கனரக வாகனங்களுக்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டதுஆனால் கடந்த சில மாதங்களாக வனத்துறையினர் 20 டன்னுக்கு மேல் ஏற்றி வரும் சில சரக்கு லாரிகளை அனுமதிக்க படுவதாக புகார் எழுந்தது.தனை அடுத்த திம்பம் மலைப்பாதை லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர் சங்கம் சார்பில் திம்பம் மலைப்பாதையில் நீதிமன்றம் உத்தரவு படி 16.2 டன் சரக்கு லாரிகளை அனுமதிக்க வேண்டும் என கோரி சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் மற்றும் ஆசனூர் வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலகம் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.இதனை அடுத்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனக்கோட்டம் வனத்துறையினர் கோபிசெட்டிபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் தாளவாடி வனத்துறையினர் நேற்று காலை முதல் கர்நாடக மற்றும் தாளவாடி இருந்துஅதிக பாரம் ஏற்றி கொண்டு சத்தியமங்கலம் நோக்கி ஆசனூர் வழியாக செல்லும் சரக்கு வாகனங்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி ஆசனூரில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட எடை மேடையில் சரக்கு வாகனங்கள் அனைத்தையும் எடை சரிபார்க்கப்பட்டது.தில் நீதி மன்றம் உத்தரவு படி 16.2 டன் எடையுள்ள சரக்கு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி 16.2 டன்னுக்கு மேல் ஒரு டன் எடை அதிகமாக இருந்தாலும் அந்த வாகனத்திற்கு குறைந்த பட்சம் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் அதற்கு மேல் எடையுள்ள சரக்கு வாகனங்களுக்கு ஒரு டன்னுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.அதுமட்டுமல்லாமல் அதிக எடையுடன் அனுமதி மறுக்கப்பட்டு மாற்று வாகனத்தில் சரக்குகளை மாற்றி ஏற்றி செல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது குறித்து கோபிசெட்டிபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் திம்பம் மலைப்பாதையில் நீதிமன்றம் உத்தரவு படி 16.2 டன் எடையுள்ள சரக்கு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அனுமதியை மீறி அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
சத்தியமங்கலம் செய்திகள்
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய உணவு ஈரோடு வடக்கு மாவட்டம் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் வழங்கப்...
-
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய உணவு ஈரோடு வடக்கு மாவட்டம் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் வழங்கப்...
-
தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில் சாணியடி வினோத திருவிழா நடைபெற்றது. தமிழக கர்நாடக மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண...
-
கல்கடம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர் ஈரோடு மாவட்டம் ...










