Monday, March 11, 2024

சத்தியமங்கலம் செய்திகள்


தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய உணவு ஈரோடு வடக்கு மாவட்டம் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் வழங்கப்பட்டது

 
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கொத்தமங்கலத்தில் உள்ள பிரபஞ்ச முதியோர் ஆசிரமத்தில் உள்ள முதியோர்களுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளையெட்டி ஈரோடு வடக்கு மாவட்டம் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் ஈரோடு வடக்கு மாவட்ட அமைப்பாளர் சிற்றரசு தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது.

 முன்னதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்லாண்டு வாழ வேண்டும் அவரது குடும்பத்தினர் நோய் நொடியின்றி வாழ வேண்டும். என பிரார்த்தனை நடைபெற்றது அதனை தொடர்ந்து அவர்களுக்கு அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது இதில் பவானிசாகர் ஒன்றிய திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Wednesday, November 15, 2023

சத்தியமங்கலம் செய்திகள்

தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில் சாணியடி வினோத திருவிழா நடைபெற்றது.

தமிழக கர்நாடக மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருவிழாவை ரசித்தனர்.



ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கும்டாபுரத்தில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் தீபாவளி முடிந்த மூன்றாவது நாளில் நடைபெறும் சாணியடி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. பல தலைமுறைகளாக நடந்து வரும் இந்தத் திருவிழாவிற்கு அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான ‘சாணியடி திருவிழா’ இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவிழாவிற்கு முதல்நாளான நேற்றே கோயிலின் பின்பக்கம் ஊர்மக்கள் சாணத்தை குவித்து வைத்திருந்தனர். இன்று காலை பீரேஸ்வரரை கோயிலுக்கு அருகேயுள்ள குளத்தில் நீராடச் செய்து, கழுதை மூலமாக கோயிலுக்கு அழைத்து வந்து பூஜைகள் செய்தனர். அதன்பிறகு கோயிலுக்கு பின்புறம் குவித்து வைத்திருந்த சாணத்தை உருண்டையாக்கி ஒருவர் மீது ஒருவர் வீசியெறிந்து வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்வின் போது ஆண்கள் சட்டை அணிவதில்லை. சாணியடி நிகழ்வு நடந்தபிறகு, பக்தர்கள் கோயிலுக்கு அருகிலுள்ள குளத்தில் குளித்துவிட்டு, பீரேஸ்வரரை வணங்கினர்.
இந்த வழிபாட்டினால் ஊர்மக்கள், கால்நடைகள் நலம்பெறுவதுடன், விவசாயமும் செழிப்பாக இருக்குமென்கின்றனர். சாணியை உடலில் பூசுவதன் மூலம் உடலிலுள்ள நோய்கள் மற்றும் பீடைகள் ஒழியுமெனவும் கும்டாபுரம் கிராம மக்கள் நம்புகின்றனர்.இந்த சாணியடி வினோத திருவிழாவிற்கு
தமிழக  கர்நாடகாவிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சாணியடி திருவிழா நடந்த இடத்தில் கிடந்த சாணியை எடுத்துக்கொண்டு சென்று தங்களுடைய விளைநிலங்களில் விவசாயிகள் 
வீசுகிறார்கள்.அவ்வாறு செய்தால் பயிர்களை நோய் தாக்காது என்பதும் இந்த கிராம மக்களின் நம்பிக்கையாக கருதப்படுகிறது.

Sunday, November 12, 2023

சத்தியமங்கலம் செய்திகள்

சத்தியமங்கலம் அருகே மரத்தில் கார் மோதி விபத்து 4 இளைஞர்கள் உயிரிழப்பு 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பங்களாபுதூர் சதுமுகை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 5 இளைஞர்கள் நேற்று இரவு திரைப்படம் பார்த்து விட்டு திரும்பி வருகையில் இரவு 2.30 மணியளவில்  சத்தியமங்கலம் அருகே உள்ள வேடசின்னானூர் கிராமம் அருகே உள்ள ஒரு புளிய மரத்தில் அதிவேகமாக கார் பயங்கரமாக மோதியது. 

இதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர். காயமடைந்த இரண்டு பேர் மீட்கப்பட்டு, கோபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் பங்களாபுதூர் குள்ளப்பநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கீர்த்திவேல்துரை, பங்களாபுதூர்  கிராமத்தைச் சேர்ந்த மயிலானந்தன், சதுமுகை கிராமத்தைச் சேர்ந்த பூவரசன்,  ராகவன் ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனர். 

காரை ஓட்டி வந்த இளையராஜா என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திரைப்படம் பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டு இருந்த பொழுது இந்த கோர விபத்து நடந்துள்ளது. சத்தியமங்கலம் பகுதியில் இன்று அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்தில் சிக்கிய நான்கு பேரும் இளைஞர்கள் ஆவார்கள். விபத்தில் இருந்த நான்கு பேர் குடும்பத்தினரும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் குவிந்துள்ளனர். இப்பகுதியில் நடந்த இந்த கோர விபத்தினால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.


Thursday, November 9, 2023

சத்தியமங்கலம் செய்திகள்

 உதயநிதி ஸ்டாலின் சனதானம் குறித்து பேசியது கருத்து சுதந்திரம் என்றால் புஞ்சை புளியம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி அன்று இந்து முன்னணி நிர்வாகிகள் பேசிய கருத்துக்கு மட்டும் காவல் துறை கைது செய்தது ஏன்..


இதை கண்டித்து வரும் ஜனவரி 26 ம் தேதி புஞ்சை புளியம்பட்டியில் மாநாடு நடைபெறும் 

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் 












ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் ஈரோடு மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் தலைமையில் மாநில செயலாளர் செந்தில் முன்னிலையில் நடைபெற்றது இதில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புஞ்சை புளியம்பட்டி பவானிசாகர் கோபிசெட்டிபாளையம் நம்பியூர் உட்பட்ட பகுதியை சேர்ந்த இந்து முன்னணி மாவட்டம் நகரம் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு ஜனவரி 26 ம் தேதி மாநாடு நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் செய்தியாளர் சந்திப்பின்போது போது புஞ்சை புளியம்பட்டி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான கடை வாடகை பல ஆண்டுகளாக வசூல் செய்யாமல் வாடகை பணம் நிலுவையில் உள்ளது இதனை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு வாடகை பணத்தை வசூலிக்க வேண்டும்

சென்னிமலை முருகன் கோவிலில் ஜனவரி 1ம் தேதி வேல் வழிபாடு திருவிழா  நடைபெற்று வேல் பழனி முருகன் கோவிலுக்கு கொண்டு செல்ல உள்ளது.இதனை இந்து முன்னணி ஆதரவு தர உள்ளது இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் சனதானம் குறித்து பேசியது கருத்து சுதந்திரம் என்றால் புஞ்சை புளியம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி அன்று இந்து முன்னணி நிர்வாகிகள் பேசிய கருத்துக்கு மட்டும் காவல் துறை கைது செய்தது சிறையில் அடைத்தனர்.


விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக ,திக, இந்திய கம்யூனிஸ்டு கட்சி போன்ற கட்சியினர் கருத்து சுதந்திரம் குறித்து யாரும் பேச வில்லை


புஞ்சை புளியம்பட்டியில் லாட்டரி சீட்டு மதுபாட்டில்கள் விற்பனை போன்ற சட்ட விரோத செயல்கள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது இதனை காவல்துறை அதிகாரி தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்


இதை கண்டித்து வரும் ஜனவரி 26 ம் தேதி புஞ்சை புளியம்பட்டியில் மாநாடு நடைபெற்றது என தெரிவித்தார்.


Wednesday, November 8, 2023

சத்தியமங்கலம் செய்திகள்

கல்கடம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர் 







ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம். ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குத்தியாலத்தூர் ஊராட்சி, கல்கடம்பூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில். பழுதடைந்த இடங்களையும், சத்துணவு சமையல் கூடத்தில், உணவுகளின் தரத்தையும், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி தெற்கு ஒன்றிய திமுக கழக ஒன்றிய செயலாளர் கே. சி. பி. இளங்கோ ஆய்வு செய்தார் 

இந்த ஆய்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் சு. பிரேம்குமார். (கி. ஊ) வட்டார வளர்ச்சி அலுவலர்,  அ. அப்துல் வஹாப்  உதவிப்பொறியாளர், முருகன். ஒன்றிய பணி மேற்பார்வையாளர். வெள்ளியங்கிரி, கோணமூலை ஊராட்சி மன்ற தலைவர். குமரேசன் (என்கிற) பா.செந்தில்நாதன், ஒன்றிய துணை செயலாளர், திரு.T.P.அசோகன். 

மற்றும் குத்தியாலத்தூர். ஊராட்சி மன்ற செயலாளர். திரு.ரஜேஷ்.பள்ளித் தலைமை ஆசிரியர். மற்றும்கழக உறுப்பினர்கள். திரு.கோவிந்தராஜ். திரு.அண்ணாதுரை, திரு.ராமசாமி. ஆகியோர் உடனிருந்தனர்.

Tuesday, November 7, 2023

சத்தியமங்கலம் செய்திகள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பழங்குடி இன மக்களுக்கு இலவச தீபாவளி பரிசு பொருட்கள் காவல்துறை அதிகாரி வழங்கினர்...





ஈரோடு மாவட்டம்  மாவோயிஸ்ட் தடுப்பு சிறப்பு தனிப்பிரிவு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஈரோடு அவர்களின் உத்தரவுப்படி  மாவட்ட காவல்துறை மற்றும் ரோட்டரி கிளப், தாளவாடி ஹில்ஸ்,  ரோட்டரி திருப்பூர் விஷன் சார்பாக  ஆசனூர் காவல் நிலைய சரகம் ஒர்த்தி & V.M. தொட்டி ஆகிய ST கிராமங்களில் உள்ள  80 குடும்பங்களுக்கு 
 பூதாளபுரம் துவக்கப் பள்ளி வளாகத்தில்  போலீஸ் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தவும், மலை கிராமத்தில் விழிப்புணர்வு மற்றும் கிராம மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல், தீபாவளி பட்டாசு இனிப்பு வழங்குதல் ,பள்ளி குழந்தைகளுக்கு எழுதுபொருட்கள் , டிபன் பாக்ஸ் , வழங்கப்பட்டது. விழாவில் தாளவாடி காவல் ஆய்வாளர், ஆசனூர் உதவி ஆய்வாளர், கேர்மாளம் வனவர், ஈரோடு மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், STF நுண்ணரிவு பிரிவு தலைமை காவலர், மாவட்ட கவுன்சிலர் ,தாளவாடி ரோட்டரி, திருப்பூர் விஷன் ரோட்டரி தலைவர்கள் , உறுப்பினர்கள் , சத்தி NPTM கோபு , ஆடிட்டர் திருமதி  அமுதா அவர்கள் , ஊர் தலைவர்கள் மாரி, பொன்னான் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டதில் நக்சல் மாவோயிஸ்டுகள் பற்றிய விழிப்புணர்வு செய்தும் விழா துவக்கப்பட்டது ,

 மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவி பொருட்கள் விபரம்:

1) இனிப்பு (லட்டு)  - 1/2 கிலோ
2) காரம் (மிக்சர்)  - 1/2 கிலோ
3) பட்டாசு - 1 பெட்டி
4) வேஷ்டி - 1
5)  சேலை - 1
5) பாய் - 1
6) தலையணை - 1
7) பிளாஸ்டிக் குடம் - 1
8) பிளாஸ்டிக் பக்கெட் - 1
9) பள்ளி குழந்தைகளுக்கு   டிபன் பாக்ஸ் - 30
10) பள்ளி குழந்தைகளுக்கு    பேனா, பென்சில், ரப்பர், சார்ப்னர், ஸ்கேல் அடங்கிய பவுச்  - 30

தலா ஒரு குடும்பத்திற்கு மேற்கண்ட ரூ.1300/- மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது. பள்ளி குழந்தைகள் மற்றும் ஊர் பொது மக்களுக்கு அய்யா அவர்கள் சார்பில் தீபாவளி வாழ்த்துக்கள் கூறி விழா இனிதே நடைபெற்று முடிந்தது.



சத்தியமங்கலம் செய்திகள்

சத்தியமங்கலம் அடுத்த கோணமூலை ஊராட்சியில் அரசு திட்ட பணிகளை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர் ..



ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம். ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோணமூலை ஊராட்சி, காந்திநகர், மாரியம்மன் கோவில் மெயின் வீதியில். சிமெண்ட் கான்கிரீட் சாலை, அமைக்கும் இடங்களையும், பழுதடைந்த கழிவுநீர் வடிகால்களையும், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி தெற்கு ஒன்றிய திமுக கழக ஒன்றிய செயலாளர் கே. சி. பி. இளங்கோ அவர்கள், பார்வையிட்டார். மேலும் இவர்களுடன் கோணமூலை ஊராட்சி மன்ற தலைவர், திரு.குமரேசன் (என்கிற) பா.செந்தில்நாதன். ஒன்றிய துணை செயலாளர் திரு.T.P.அசோகன். பொறியாளர். திரு.ஜெயகாந்தன். அவர்கள். மற்றும் கழக உறுப்பினர்கள். திரு.கோவிந்தராஜ். திரு.விஜயமூர்த்தி. ஆகியோர் உடனிருந்தனர்.




Sunday, November 5, 2023

சத்தியமங்கலம் செய்திகள்


திம்பம் மலைப்பாதையில் நீதிமன்றம் உத்தரவு படி 16.2 டன் எடைக்கு மேல் ஏற்றி வரும் வாகனங்களுக்கு தடையை மீறினால் குறைந்த பட்சம் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும அதற்கு மேல் ஒரு டன் எடைக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது.தமிழ்நாடு கர்நாடக ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் முக்கிய மலைப்பாதை உள்ளது.த மலைப்பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றம் உத்தரவு படி திம்பம் மலைப்பாதையில் 6,10,சக்கர லாரிகள் மற்றும் மொத்த எடை 16.2 டன் எடையுள்ள சரக்கு லாரிகளை அனுமதிக்க வேண்டும் எனவும் கனரக வாகனங்களுக்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டதுஆனால் கடந்த சில மாதங்களாக வனத்துறையினர் 20 டன்னுக்கு மேல் ஏற்றி வரும் சில சரக்கு லாரிகளை அனுமதிக்க படுவதாக புகார் எழுந்தது.தனை அடுத்த திம்பம் மலைப்பாதை லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர் சங்கம் சார்பில் திம்பம் மலைப்பாதையில் நீதிமன்றம் உத்தரவு படி 16.2 டன் சரக்கு லாரிகளை அனுமதிக்க வேண்டும் என கோரி சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் மற்றும் ஆசனூர் வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலகம் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.இதனை அடுத்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனக்கோட்டம் வனத்துறையினர் கோபிசெட்டிபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் தாளவாடி வனத்துறையினர் நேற்று காலை முதல் கர்நாடக மற்றும் தாளவாடி இருந்துஅதிக பாரம் ஏற்றி கொண்டு சத்தியமங்கலம் நோக்கி ஆசனூர் வழியாக செல்லும் சரக்கு வாகனங்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி ஆசனூரில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட எடை மேடையில் சரக்கு வாகனங்கள் அனைத்தையும் எடை சரிபார்க்கப்பட்டது.தில் நீதி மன்றம் உத்தரவு படி 16.2 டன் எடையுள்ள சரக்கு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி 16.2 டன்னுக்கு மேல் ஒரு டன் எடை அதிகமாக இருந்தாலும் அந்த வாகனத்திற்கு குறைந்த பட்சம் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் அதற்கு மேல் எடையுள்ள சரக்கு வாகனங்களுக்கு ஒரு டன்னுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.அதுமட்டுமல்லாமல் அதிக எடையுடன் அனுமதி மறுக்கப்பட்டு மாற்று வாகனத்தில் சரக்குகளை மாற்றி ஏற்றி செல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது குறித்து கோபிசெட்டிபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் திம்பம் மலைப்பாதையில் நீதிமன்றம் உத்தரவு படி 16.2 டன் எடையுள்ள சரக்கு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அனுமதியை மீறி அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

சத்தியமங்கலம் செய்திகள்

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய உணவு ஈரோடு வடக்கு மாவட்டம் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் வழங்கப்...